செவ்வாய், 16 ஜனவரி, 2018

அலோபதி மருத்துவத்தின் பயங்கரவாதம்,, மனிதகுலம் தப்பிக்குமா?

🌹 *அலோபதி மருத்துவத்தின் பயங்கரவாதம்- மனிதகுலம் தப்பிக்குமா?*

நவீன மருத்துவம் ஆரோக்கியத்திற்கே எதிரானது. மனித நலனுக்கு சேவை செய்வதற்காக அது உருவாக்கப்படவில்லை. மாறாக, பெரிய நிறுவனமாக உருவாகியிருக்கும் தனக்கு சேவை செய்வது மட்டுமே அதன் நோக்கம். நவீன மருத்துவம் குணப்படுத்துவதைவிட அதிகமானவர்களை நோயாளியாக்குகிறது என்கிறார் ஆஸ்திரிய தத்துவஞானியும் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாருமான இவான் இல்லிச். இவரே அமெரிக்காவில் இவ்வாறு சொல்லியிருந்தால் இவர் மேல் கார் ஏற்றிக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். மருந்து கம்பெனிகளின் செல்வாக்கு அந்த அளவுக்கு அமெரிக்காவையும் மேற்குலகையும் தனது பிடியில் வைத்திருக்கிறது.
1975ல் வெளியிட்ட மெடிக்கல் நெமசிஸ் (மருத்துவத்தின் ஊழ்வினை) என்ற புத்தகம் மூலமாக முதல் முதலில் நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளைப் பற்றித் தீவிரமாக மக்களிடையே பேசியவர் இவர். 2002ல் அவர் இறந்துவிட்டாலும் அலோபதி மருத்துவம் கட்டவிழ்த்தவிடும் ஊழிக்கால கிருமிகள் அவர் சொன்ன கருத்துக்கு உண்மை சேர்கின்றன. அண்மையில் அம்பலமான என்.டி.எம்-1 சூப்பர் பக் என்ற எந்த நோய் எதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாத கிருமி இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாக சில நவீன மருத்துவ ஆய்வாளர்கள் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள்.
அலோபாதி அல்லாத மருத்துவத்தில் நல்ல குணம் கிடைத்திருக்கிறது என்று ஒரு அலோபதி மருத்துவரிடம் கூறும்போது ஏதோ செய்வினை, பில்லி, சூனியத்தைப் பற்றிப் பேசுவது போல அவர்களின் முகம் கோணிவிடுகிறது. உடனடியாக அந்த அலோபதி மருத்துவரிடம் உருவாகும் எதிர்வினை, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் You are with us or against us மாதிரியான ஒரு அகங்காரமான ஆதிக்க வெறி கொண்ட அணுகுமுறை தான். இதில் அந்த தனிப்பட்ட மருத்துவரைக் குறை சொல்லிப் பயனில்லை. இன்று எம்.பி.பி.எஸ்., எம்.டி., எஃப்.ஆர். சி.எஸ்., என்றெல்லாம் எழுத்துக்களை போட்டுக் கொள்ளும் வர்க்கம் அவ்வாறு எதிர்வினையாற்றவே தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனப்பான்மை விட்டு வெளியே வருவதற்குத் திறந்த மனம் வேண்டும். பெரும்பாலான மருத்துவர்களிடம் அது இருப்பதில்லை.
வரலாறு முழுக்கவே சக மருத்துவ முறைகளோடு பகைமை உணர்வுடன் வளர்க்கப்பட்ட மருத்துவம் அலோபதி. தனக்கு முன்பே பிறந்த தன்னை விட செல்வாக்குடனிருந்த ஹோமியோபதியைப் போர் செய்து ஓரங்கட்டிய அலோபதி, தான் புகுந்த மண்ணில் எல்லாம் அங்குள்ள பூர்வீக மருத்துவ முறைகளை மாந்த்ரீகத்திற்கு நிகராகத்தான் மதிக்கிறது; இந்தியாவில் ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் நடத்துவது போல. அலோபதி மருத்துவம் உருவாக்கும் மத நிறுவன விசுவாசத்திலிருந்து வெளியே வந்தவர்கள்தான் அலோபதிக்கு எதிரான இயக்கத்திற்கு முக்கிய பங்களிக்கிறார்கள் என்பது, அது எந்த அளவுக்கு ஒரு மோசமான அரசியல் இயக்கமாக இருக்கிறது என்பதற்கு சாட்சி.
நவீன மருத்துவம் என்று இன்று அழைக்கப்படுகிற சிகிச்சை முறைக்கு அதன் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர் அலோபதி. ஆனால் விவரமறிந்த அலோபதி மருத்துவர்கள் யாரும் அதை அந்தப் பெயரிட்டு அழைப்பதை ஏற்க மாட்டார்கள். அதன் அர்த்தம் அப்படி. ‘அலோ’ என்றால் ‘எதிர்’ என்று அர்த்தம். ‘பதி’ என்றால் ‘நோய்’ என்று அர்த்தம். அதாவது ஒரு நோய்க்கு நேர் எதிரான ஒன்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருவது. தலை வலிக்கிறதா? அதைவிட கடுமையான வலியை ஏற்படுத்துகிற ஒரு களிம்பைத் தடவினால் முடிந்துவிட்டது. மலச்சிக்கல் ஏற்படுகிறதா? ஜீரணத்தில் ஏற்படும் பிரச்சினை பற்றியெல்லாம் கவலை இல்லை. நேரடியாக குதம் வழியாக மலமிழக்கியைப் புகுத்தி விட்டால் விஷயம் முடிந்துவிட்டது. உருவான காலத்தில் அலோபதி கொடூரமான வழிமுறைகளில் சிகிச்சை தரும் முறையாகவே அறியப்பட்டது. ஹோமியோபதி அதற்கு நேர் எதிரானது.
Principe of similars என்று ஹோமியோபதியை அழைக்கிறார்கள். நோயை உண்டாக்கும் கிருமியேதான் அதற்கு மருந்தும்கூட. எந்தக் கிருமி நோயை ஏற்படுத்துகிறதோ அதே கிருமியை மிக நுண்ணிய அளவில் உடலுக்குள் அனுப்புகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை வீரியம் குறைவாக உள்ள கிருமிகள் தட்டி எழுப்புகிறது. இயற்கையாக, பக்கவிளைவுகள் இல்லாமல் நோயை வேரோடு ஒழிக்க அல்லது நோய் வராமலே தடுக்க இது முடிகிறது. தத்துவார்த்தமாகப் பார்த்தால் அலோபதியும் ஹோமியோபதியும் நேர் எதிரானவை. அதனால் அவற்றிற்கிடையிலான போரும் தவிர்க்க முடியாததாக மாறியது.
டாக்டர் சாமுவேல் ஹானேமன் 1790களில் ஹோமியோபதியை ஜெர்மனியில் உருவாக்குகிறார். தனது மருத்துவத்தில் உடலுக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை மனதிற்கும் கொடுக்கிறார் அவர். தனிப்பட்ட முறையில் அவர் அந்த மருத்துவத்தை எந்த வகையிலும் ஆன்மீகம் அல்லது மதத்துடன் தொடர்புபடுத்தியதாகத் தெரியவில்லை. 1800களுக்கும் 1900களுக்கும் நடுவில் உருவாகிறது அலோபதி. 1844ல் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோமியோபதி அமைக்கப்பட்டு, திட்டமிட்ட வளர்ச்சியை அடைய நினைக்கிறது. அதற்கு எதிராக 1848ல் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் அமைக்கப்படுகிறது (அலோபதி மருத்துவர்களால்). இதே காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்) கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனால் வேகமான வளர்ச்சியடையும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விரைவிலேயே அலோபதி மருத்துவத்தை தங்களுடைய கருவியாக சுவீகரிக்கின்றன. ஹோமியோபதியை ஒழிக்க இது உதவுவதால் அலோபதி மருத்துவமும் இந்தக் கூட்டுக்குத் தயாராகவே இருந்தது.
       இந்த சதிக்கோட்பாட்டை நான் நம்புவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு தகவல். அலோபதி மருத்துவர்கள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனை அமைக்கும்போது தங்கள் உறுப்பினர்கள் யாரும் ஹோமியோபதி மருத்துவத்துடனோ, ஹோமியோபதி மருத்துவர்களுடனோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை ஒரு விதியாக வைத்திருந்தார்கள். அதாவது, தங்களுடைய மதம் மட்டுமே உண்மையானது என்ற தட்டையான பார்வை கொண்ட ஒரு மத நிறுவனம் என்ன செய்யுமோ அதைச் செய்தார்கள். பிற்காலத்தில் அலோபதி மருத்துவர்கள் உருவாக்கிய சங்கம், மருந்துக் கம்பெனிகளின் செல்வாக்குடன் அமெரிக்காவில் அதிகார மையமாக மாறியபோது ஹோமியோபதி மருத்துவம் அறிவியல்பூர்வமற்றது என்ற பிம்பம் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது. அலோபதி மருத்துவர்களும் அவர்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் மருத்துவ ஆய்வு உலகமும் இன்றளவில்கூட ஹோமியோபதியை ஒரு அறிவியல்பூர்வமான மருத்துவமாக அங்கீகரிப்பதில்லை.
அலோபதி தன்னைப் பகுத்தறிவுபூர்வமான மருத்துவ முறை என்று கூறிக் கொண்டது. தன்னை அறிவியல்பூர்வமான சிகிச்சை என்றது. தன்னைத் தவிர அத்தனையும் அறிவியல் இல்லை என்றும் கூறி வருகிறது. ஹோமியோபதியை அனுபவ சிகிச்சை என்று அழைக்கலாம். ஒரு மருந்து நோயாளியிடம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆராய்ந்தறிவது அறிவியல்பூர்வமான வழிமுறை தான். ஆனால் மருந்து நிறுவனங்களின் சக்தியோடு புதிய தொழில்நுட்பத்தின் வரவையும் அலோபதி தனதாகக் கொண்டு மருத்துவத்திதற்கு ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தபோது அத்தகைய தர்க்கங்கள் எடுபடவில்லை. அந்தப் போரில் தோற்றுப்போன ஹோமியோபதி ஓரங்கட்டப்பட்டது. 1920களுக்குப் பிறகு மருத்துவத்தில் புகுந்த தொழில்நுட்பத்தின் உபயோகம் அலோபதியின் தனி ஆதிக்கத்தை முழுமையடையச் செய்தது. மேற்குலத்தின் ஒரே மருத்துவ முறை அலோபதி மட்டுமே என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்ட்டது.
நானாவித சக்திகளுடனான கூட்டு மூலம் ஹோமியோபதியின் ஆதிக்கத்தை அலோபதியால் ஒழிக்க முடிந்ததே தவிர, அந்த மருத்துவத்தின் தாக்கத்தையோ சாரத்தையோ அழிக்க முடியவில்லை. கடந்த இரு நூற்றாண்டுகளாக கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பறித்து வந்த கொள்ளை நோய்களை ஒழிப்பதற்கு, அறிகுறிகளை மட்டுமே ஒழிக்கும் அலோபதி கிஞ்சித்தும் பயன்படவில்லை. போலியோ முதல் அம்மை நோய் வரை உலகின் மிகக் கொடிய நோய்களுக்கு நிரந்தர தீர்வைக் கொடுக்க அத்தனை தடுப்பூசிகளும் ஹோமியோபதி மருத்துவ தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான்: நோய்கிருமியையே நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவது (தனி நபர்களின் தேவைக்கேற்ப மருந்தின் வீரியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஹோமியோபதியின் மற்றொரு விதியையும் பின்பற்றியிருந்தால் ஏராளமான பக்க விளைவுகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்த்திருக்கலாம்). நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தங்கள் பிரம்மாஸ்திரமாகக் கொண்ட அலோபதியின் மடத்தனம் இன்று சூப்பர் பக் வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.
மனிதர்கள் புதிய ஆன்டிபயாடிக் தயாரிக்கும் வேகத்தைவிட அந்தக் கிருமிகளின் உருமாற்றம் வேகமாக நிகழ்கிறது (அரை மணி நேரத்தில் கூட ஒரு கிருமியால் தன்னை ஆன்டி பயாடிக்கைத் தாக்குபிடிப்பதாக மாற முடியுமாம்). இப்போது புது தில்லியின் பெயரைத் தாங்கிய என்.டி.எம்-1 என்ற சூப்பர்பக் மூலம் இந்தியாவுக்கான மருத்துவச் சுற்றுலாவை ஒழித்துக் கட்டுகிறார்களோ இல்லையோ, நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கும் தொழிலை ஒழித்துக் கட்ட வேண்டி வரும் போலிருக்கிறது. கிருமி தங்களை இவ்வளவு வேகமாக நோய் எதிர்ப்பு மருந்தைத் தாக்குப் பிடிப்பதாக மாறும்போது பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரிப்பதும் அதற்காக மேலும் பல ஆயிரம் கோடி செலவு செய்து ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டிருப்பது வீண் வேலை என்று அலோபதி மருத்துவ வட்டாரத்திலேயே ஒரு தரப்பினர் கருதத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இத்தனை ஆயிரம் கோடி ரூபாயின் மீது அமர்ந்திருக்கும் மருந்து கம்பெனி மாஃபியா அவ்வளவு எளிதில் இந்த உண்மை வெல்ல அனுமதிக்காது.
200 வருட அலோபதி-ஹோமியோபதியின் போரைத் திரும்பிப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் பலவீனமான மருத்துவ தத்துவத்தைக் கொண்ட ஒரு அமைப்பு, மிகவும் வலிமையான தத்துவார்த்த பின்புலத்தை ஹோமியோபதியைத் தோற்கடித்திருக்கிறது. இந்த மருத்துவங்களைவிட பழமையான இந்தியாவின் ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் கூட மருத்துவமும்கூட அதனால் தோற்கடிக்கப்பட்டன. அலோபதி வெறுமனே அறிகுறிகளையே சரி செய்கிறது என்பது எல்லோராலும் பேசப்படும் ஒன்றுதான். அதுபோக, நோயின் உடல்ரீதியான அம்சத்திற்கு மட்டுமே அலோபதி முக்கியத்துவம் தருகிறது. உளவியலுக்கும் உடலின் இயக்கத்திற்கும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பை முற்றிலும் நிராகரிக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் வேறுபாடுகள் கொண்டவர் என்பதால் ஒவ்வொருவருக்குமான சிகிச்சை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் அலோபதி நிராகரிக்கிறது. மாறாக, அனைவருக்குமான பொதுவான அளவு ஒன்றை நிர்ணயம் செய்வதன் தொடர் விளைவாக வேதிப்பொருட்களின் அதீத பிரயோகத்தால் நோயைவிட அதிகமான பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு உறுப்பிற்குப் பாதிப்பு என்றால் அதை மட்டுமே தனித்து சிகிச்சை தருகிற அளவுக்கு அலோபதி மருத்துவம் இயந்திரத்தனமாகச் செயல்படுகிறது.
1920களில் ஒரு மருத்துவ முறைக்கு ஏகாதிபத்யம் வழங்கியதால் இன்று மனித குலம் நோய்களையும் மரணங்களையும் விலையாகக் கொடுக்கிறது என்கிறார் மருத்துவ வரலாற்றாய்வாளரான ஹாரிஸ் எல்.கொல்டர். அலோபதி ஒரு கோரமான ரத்தச் சரித்திரம் எழுதி வருகிறது. இதய பைபாஸ் ஆபரேஷன் முதல் சிசேரியன் பிரசவம் வரை தேவையில்லாமல் பிரயோகிக்கப்படும் கத்திகள் ஏற்படுத்திய ரணமும் உயிரிழப்பும் நிஜமான போர்களில் ஏற்பட்டதை விட அதிகம். தங்களின் மூட்டுப் பிரச்சினைகளுக்கு வசதியாக ஒரு நல்ல ஆயுர்வேத வைத்தியரை நாடும் அலோபதியின் ஆர்த்தோ டாக்டர்கள் தங்களிடம் காசு கொடுத்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் மட்டும் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள்.
அலோபதியின் எழுச்சி உருவான அமெரிக்காவில் அதனால் ஏற்படும் ரணங்களும் இயல்பாகவே அதிகமாக இருக்கின்றன. அமெரிக்காவில் புற்றுநோய்க்குத் தரப்படும் கீமோதெரப்பி சிகிச்சையின் கடுமையே 25 சதவீத நோயாளிகளின் உயிரைப் பறிப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வேறு சிகிச்சை முறைகள் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்துவதாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது மருந்து நிறுவன மாஃபியாக்கள் காவல் துறையை ஏவிவிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அமெரிக்காவில் அலோபதி மருத்துவத்தின் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும், ஹோமியோபதி போன்ற மருந்துகளை ஆதரிக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்வதற்குக்கூட முயற்சிகள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன.
அலோபதி மருத்தவத்தின் பயங்கரவதம் மேற்குலகில் ஹோமியோபதியை ஓரங்கட்டியது போல இந்தியாவின் ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தையும் ஓரங்கட்ட முயற்சி செய்யாமல் இல்லை. ஆயுர்வேததிற்கு வலுவான மருத்துவ சிந்தனை உண்டென்றாலும் அதில் ஆன்மீகத்திற்கும் இடமுண்டு. அதை அறிவியல் பூர்வமற்றது என்று ஒதுக்கித் தள்ள இதுவே வசதியாகப் போனது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் கிராமங்களில் மட்டுமே உயிர் வாழ்ந்தது. அதுவும்கூட நவீன மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் துணியாததால் ஏற்பட்ட மறைமுகமான நன்மை இது. அலோபதியின் பிரச்சினைகள் இப்போது அம்பலமாகத் தொடங்கிவிட்டதால் நமது மண்ணின் மரபுகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகின்றன. அலோபதி மருத்துவம் வளர்த்துக் கொண்டிருக்கும் நவீன நோய் பரிசோதனை முறைகளும் தொழில் நுட்பத்தின் உதவியும் அவசியம்தான் என்றாலும் மிக அரிதாகவே பிரயோகிக்கப்பட வேண்டியவை. பணத்திற்காக அதீதமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. நோயிலிருந்து விடுதலை கிடைப்பதற்குப் பதில் அதைவிட கூடதலான வலி வந்து சேர்கிறது.
நோய் வந்த பிறகு தலையிடுவதுதான் அலோபதியின் ஆதாரமே என்பதால் நோய்கள் இல்லாவிட்டால் அலோபதியும் இல்லை. அதனால் அவர்கள் ஒருபோதும் நோய்களிலிருந்து மனித குலத்திற்கு விடுதலை பெற்றுத் தரப் போவதில்லை. மாறாக, சுயமாகவே செய்துகொள்ளும் அளவுக்குத் தன்னிறைவுக்கான சாத்தியத்தைத் தரும் ஆயுர்வேதத்தைப் போன்ற மருத்துவ முறைகள் நோயால் வருந்துகிறவர்களின் எண்ணிக்கையையே குறைக்கும் வருமுன்காப்பு அம்சத்தைக் கொண்டுள்ளன. மூட்டுப் பிரச்சினைகளுக்கு அக்குபஞ்சர், ஆயுர்வேதம் போன்றவை சிறப்பாக இருக்கிறது என்ற எண்ணம் இருக்கிறது. புற்றுநோய் முற்றும் முன்பே கவனித்தால் செல்களின் கட்டுப்பாடில்லா பெருக்கத்தைப் பாரம்பரிய மருத்துவங்களில் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்று ஒதுக்கித் தள்ளினால் அது அலோபதியின் சுயநல நோக்கையே காட்டும். இன்றைய நவீன மருத்துவத்தின் சோதனை முறைகளைப் பயன்படுத்தி யோக நிலைகளினால் மூளையில் ஏற்படும் நல்லவிதமான மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
புற்றுநோய்க்கு கீமோதெரப்பி எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கும் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகளுக்கும் ஆயுர்வேதம் சிகிச்சை தருவதால் வலி மிகுந்த நிவாரண காலகட்டம் வெகுவாகக் குறைவதும் இறப்பு விகிதம் குறைவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் முதற்கட்டமாக அத்தகைய கடுமையான அறுவை சிகிச்சைகள் முடியாத நிலையில் தான் செய்யப்பட்டனவா என்ற கேள்விக்குப் பதில் ஒருபோதும் கிடைப்பதில்லை. நவீன மருத்துவத்தின் கர்ப்பத் தடை மாத்திரைகளும் வாசக்டமிகளும் ஏற்படுத்திய பக்க விளைவுகள் எத்தனையோ மனிதர்களின் இனிமையான வாழ்வை நிரந்தரமாகப் பறித்திருக்கின்றன அல்லது வாழ்கை முழுவதும் ஊனமாக்கியிருக்கின்றன. பத்மாசுரனுக்குக் கொடுத்த வரத்தைப் போல ஒரு பேரழிவை உருவாக்கிவிட்ட பிறகு, அதைக் கட்டுக்குள் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் உலக நாடுகளின் நிதியை எல்லாம் சாப்பிடுவதுதான் இதன் செயல்முறை. எச்.ஐ.வி, எய்ட்ஸை மையமாக வைத்து உருவான ஒரு பெரிய நிதி சாம்ராஜ்யமே அதற்கு உதாரணம். அக்குபஞ்சரோ, ஹோமியோபதியோ சர்வரோக நிவாரணி என்று இங்கு வாதிடவில்லை. எந்த மருத்துவ முறை, எந்த நோய்க்கு சிறப்பாக வேலை செய்கிறதோ அதைப் பயன்படுத்துவதுதான் மனித குலத்திற்கு நலம் பயக்கும். ஆனால் ஆரோக்கிய சமூகத்தை எட்ட உதவக்கூடிய அத்தகைய திறந்த மனதுடனான அணுகுமுறை ஏற்படுவதற்கு நவீன மருத்துவம் தடையாக இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.
“மனிதகுலம் இதுவரை எத்தனையோ பேரழிவுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. நவீன மருத்துவத்திடமிருந்து மீண்டுவரும்” என்கிறார் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த உடல்நலக் கட்டுரையாளரான ஜெர்ஹார் கௌச்சர். ஆனால் மற்ற பேரழிவுகளிலிருந்து மீண்டு வந்ததைவிட இது தான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஏனெனில் இதில் மனிதனுக்கு எதிரி இயற்கை அல்ல, சக மனிதன்.
நன்றி : உயிர்மை - செப் 2010.

ஹோமியோபதி மருத்துவம்:

🌹🌹🌹🌹🌹🌹
🌺🌺🌺🌺🌺🌺
*ஹோமியோபதி*

உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவம் இன்று வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்து வருகின்றனர். ஹோமியோபதி மருத்துவம் பாதுகாப்பானதாகும், சிறந்த தன்மை, பண்புகளைக்கொண்டது.  இந்திய குடும்பங்களில் “ஹோமியோபதி” நல்ல பெயர் பெற்றுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10% மக்களுக்கு மேல் இம்மருத்துவத்தினை சார்ந்து பயன்படுத்துகின்றனர்.

ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது.
இந்த மருத்துவ முறை இந்தியாவில் சுமார் 150 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பாரம்பரியத்துடன் ஒன்றாக கலந்து இந்திய மருத்துவமுறைகளில் ஒன்றாக கருதப்படும் அளவு வளர்ந்திருக்கிறது.
இம்மருத்துவமுறை நோயுற்றோருக்கு, மனரீதியாகவும், சிந்தனையிலும், ஆன்மீக துறை மற்றும் உடல்நிலையில் சமநிலையினை உண்டாக்குகிறது. 

ஹோமியோபதி என்கின்ற வார்த்தை கிரேக்கசொல்லான “ஹோமோ” என்பது “ஒத்த மாதிரியான” மற்றும் “பேத்தோ:” என்பது “வேதனை” எனும் அர்த்தம் தரும் சொல்லிருந்து வந்தது ஆகும்.
ஹோமியோபதி என்பது குறைந்த அளவான மருந்து கொடுத்து நோய்களை குணமாக்குவது ஆகும். இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படாது. இயற்கையின் விதியின் அடித்தளமான “விருப்பத்தை விருப்பம்மூலம் குணப்படுத்துதல்”எனும் இந்த அறிவியல் தத்துவத்தை டாக்டர். சாமுவேல் ஹானிமேன் என்பவர் விளக்கினார். உடல்நலம் குன்றிய மக்களுக்கு கடந்த இருநூறு ஆண்டுகளாக நோயை நீக்கி சுகத்தை அளித்துக்கொண்டு வருகிறது.
நோயாளிகளுக்கு குறிப்பிட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தானது குறிப்பிட்ட நெறிமுறைகளின் படி தயார் செய்யும் பொருள் என கூறலாம். இதை மருந்து என்றோ, மாத்திரை என்றோ, வலிநிவாரணி என்றோ கூறமுடியாது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் இந்த பொருள் நோயிலிருந்து விடுபட வைக்கிறது.

ஹோமியோபதி மருத்துவர்கள் இரண்டு முறைகளில் நோயாளியின் நோயினை பகுத்து மருந்துகளை வழங்குகிறார்கள். இதனை மெட்ரியா மெடிக்கா மற்றும் ரெப்பரியட்யோரில் என கூறுவதுண்டு.
ஹோமியோபதி மெட்ரியா, மெடிக்கா மருத்துவ வகைபடுத்தி ஆங்கில வரிசையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை நிவாரண அறிகுறி வகையால் வரிசைபடுத்தியுள்ளனர். இதன் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹோமியோபதி பகுப்பில் நோய்களை வகைப்படுத்தியும், வரிசைப்படுத்தியும் அதற்கான அறிகுறிகளையும் சேர்த்து அதற்கான நிவாரணியையும் குறிப்பிடிருப்பர்.

ஹோமியோபதி விலங்குகள் தாவரம், தாதுக்கள், செயற்கையான பொருட்கள் ஆகியவற்றில் இருந்து வரும் பொருள்கள் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. சோடிய குளோரைடு, அல்லது சமையல் உப்பு அல்லது பாம்பின் விஷம் ஒபியம் மற்றும் தைரோடினம் மற்றும் ஹோமியோபதி முறையில் “நோசோட்ஸ்”முறை அதாவது நோயுற்ற பொருட்களால் ஆன மலம், சிறுநீர், சுவாச உறுப்புகளின் கழிவு, இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனை ஆரோக்கியமான விலங்குகளில் இருந்து எடுத்தால் “சாரகோட்ஸ்”என்று கூறுவர்.

ஹோமியோபதி மருந்து தயாரிக்க ஓடு, உரல் மற்றும் அம்மி பயன்படுத்தப்படுகிறது. உரலில் உலக்கை மூலம் இடித்து கடைதல், அம்மியில், , அரைக்கும் கல்லைவைத்து அரைத்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
ஹோமியோபதி முறையில் மருந்து தயாரிப்பவர்கள் “டைனமைசேசன்”அல்லது “பொட்டன்சியேசன்” என்ற முறையில் ஆல்கஹால் அல்லது சுத்தமான நீரில் கலந்து நெகிழ்ச்சியான வளைந்து கொடுக்ககூடிய புட்டியில் போட்டு அதனை வேகமாக பத்துமுறை ஆட்டி அசைத்துக்குலுக்கி கொடுப்பர். இதனை “சக்சன்”என்பர்.

டாக்டர். சாமுவேல் ஹானிமேன் கூறும் போது நோயை குணமாக்க கொடுக்ககூடிய மருந்தானது அதன் அதிகரிக்கப்பட்ட வீரியத்தால் பக்கவிளைவுகள் உண்டாக்க நேரிடும். இதனை தவிர்க்க வீரியத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஹானிமேன் புதிய கண்டுபிடிப்பை உண்டாக்கினார் இது குதிரை இறக்கை போன்று தோலினால் செய்யப்பட்டது ஆகும். ஒருபுறம் குதிரை முடியினால் மூடப்பட்டிருந்தது. இதனுள் குவார்ட்டிஸ், சிற்பி ஓடு ஆகியவைகளை சர்க்கரை கலந்து அறைத்தனர். இதனை “டிரைட்டியுசன்” என அழைத்தனர்.
டாக்டர். சாமுவேல் ஹானிமேன் ஹோமியோபதி மருத்துவத்தில் லாக்ரதமிக் தகுதி அளவுகளை பயன்படுத்தினார். அவர் “சி” அளவுமுறையை உருவாக்கி, இதன் மூலம் அம்மருந்தினை ஒன்றுக்கு நூறு என வீரியத்தை குறைத்தார். மற்றும் “2சி“ முறையால் மருந்தின் வீரியத்தை நூறு மடங்காக குறைத்து, அதன்பின்னர் அதனை மீண்டும் நூறுமடங்காக குறைத்து, ஆக இம்முறையில் 10, 000 முறையாக அதன் வீரியத்தை குறைத்தார். இது போன்று “6சி” என்பது ஒருமருந்தினை இம்முறையால் ஆறுமுறை அதன் அடர்த்தியை குறைப்பதாகும். இதன் மூலமாக மூலப்பொருள் 100 −6 =10 −12 ஓர்பகுதி ஒருடிரிலியனாக மாறுகிறது(1/1, 000, 000, 000, 000)இவ்வாறு மருந்தின் வீரியத்தை அதிகமாக குறைக்க முடியும். ஹோமியோபதி முறையால் ஒருதிரவத்தின் அடர்த்தியை குறைக்கும் பொழுது அது வீரியமாகிறது. அதனால் அந்த மருந்துகள் சுகம் தருகிறது. இம்முறையால் அடர்த்தியில்லாத மருந்து சுத்தமான நீர், சர்க்கரை, சாரயம் போன்று உள்ளது.
டாக்டர். சாமுவேல் ஹானிமேன் நிறைய தேவைகளுக்கு 30சி அடர்த்தியினை பயன்படுத்தினார்கள். மருந்துகளை எண்ணமுடியாத அளவுக்கு அடர்த்தியினை குறைத்தார்கள் இதன் மூலம் அணு அல்லது மாலிக்குள் அல்லது மிகச்சின்ன வேதியல் பொருளாக உண்டு பண்ணி பயன்படுத்தினார்கள்.  ”12சி”முறையில் ஒரு மாலிக்குகளில் குறைக்கும் முறை விரும்பத்தகுந்த காரணத்திற்கு வழிவகுத்தது.
டாக்டர். சாமுவேல் ஹானிமேன் ஹோமியோபதி மருந்தினை தனக்கும், பிறர்க்கும் மற்ற நோயாளிகளுக்கும் பல ஆண்டுகள் கொடுத்து பரிசோதனை செய்தார். இவரது பரிசோதனையில் மருந்தினை நோயாளிகளுக்கு நிவாரணியாக கொடுக்கவில்லை ஏனெனில் மருந்துகள் நோய்க்கு அறிகுறிகளை உண்டாக்குகின்றன. இந்த அறிகுறிகள் நோயின் காரணமாக உண்டானதா அல்லது கொடுக்கப்பட்ட மருந்தினால் உண்டானதா என அவருக்கு தெரியவில்லை. எனவே தான் இந்த சோதனையில் நோயாளிகள் சேர்க்கப்படவில்லை. ஆகவே எந்த நோய்க்கு எந்த மருந்து என கண்டறிய வேண்டும். இதனை ஜெர்மன் பொழியில் “புரூபங்”என அழைத்தனர். ”புரூபங்” என்றால் சோதனை என்று பொருள் ஆகும்.
ஹோமியோபதி மருந்துகளில் சேர்க்கப்படும் கூட்டு பொருள்கள் பற்றி பயனாளிகள் அறிந்துகொள்ளும போது அவர்களுக்கு அறுவெறுப்பை உண்டாக்கும். ஹோமியோபதி முறையில் தயாரிக்கப்படும், மருந்தில் சேர்க்கப்படும் ஆக்க கூறுகள் தயார்படுத்திய உடன் மிக குறைவான அளவு அல்லது அதன் தன்மையில் இல்லாமலும் இருக்கலாம்.
தொடர்பான நடைமுறைகள்
வழிமுறைகள்
ஜானன் ஜோசப் வில்லியம் லக்ஸ் என்பவர் ‘ஈசோபதி’ என்ற முறையினை 1830 ல் கண்டுபிடித்தார். ஈசோபதி என்கிற முறையானது, ஓமியோபதி முறையில் வேறுபட்டது ஆகும். நோயினை உண்டாக்கும் காரணிகளிருந்தோ, அல்லது நோயினால் ஏற்படும் விளைவுகளிருந்தோ கழிவுப்பொருட்களில் உண்டாக்கபடுகிறது. இதனை ஹோமியோபதி தடுப்பு முறை என அழைப்பர்.

ஹோமியோபதி மருத்துவர் எட்வர்டு பேக் என்பவரால் கண்டுபிடிக்கபட்டது மலர்மருத்துவம். அதாவது பூக்களை பறித்து அதனை நீரில் இட்டு, சூரிய ஒளியில் வைப்பதாகும். இந்த முறையில் அளிக்கப்படும் சிகிச்சை ‘முக்கியமான சக்தி’ ஹோமியோபதி மருந்து போன்று இருந்தது. ஆனால் இதன் தயாரிப்பு முறை வேறு விதமாக இருந்தது. பேக் பூக்களின் மூலம் கொடுக்கப்படும் சிகிச்சை மிகவும் மென்மையாக, நெகிழ்ச்சியாக இருந்தது. இம்முறை சிகிச்சை அதிக அளவில் பயனளிக்காமல் இருந்தது. பூக்களின் மூலம் ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் நிரூப்பிக்கபடவில்லை.
மின் ஹோமியோபதி
மின் ஹோமியோபதி, 19ம் நூற்றாண்டுகளில் மின் ஆற்றலோடு சேர்த்து வைத்தியம் செய்தனர்.
தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனம் கொல்கத்தா
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் நாள் கொல்கத்தாவில் (NIH)தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனம் துவங்கபட்டது.
இந்த நிறுவனம் ஹோமியோபதியில் பட்ட வகுப்புகள் 1987 முதலும், பட்ட மேற்படிப்பு வகுப்புகள் 1998-99 முதலும் நடத்தி வருகின்றது. இந்த நிறுவனம்(NIH)மேற்கு வங்க பலகலைகழகத்தில் உடல் நல அறிவியல் துறையுடன் 2004 – 2005 முதல் இணைந்து நடத்திவருகிறது. NIH ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
BHMS படிப்பு, 51/2 ஆண்டுகள் படிப்பின் காலம் ஆகும். (இதில் 1 வருடம் கண்டிப்பாக நேரடியாக நிறுவனத்தில் படிப்பது ஆகும்) M. D(HOM) படிப்பில் ஆர்கனான், ரெப்ரட்டரி, மற்றும் மெட்டீரியா மெடிக்கா ஆகிய இதில் ஒன்றை விருப்பபாடமாக பயில வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஆறு இடங்களே உள்ளது.
நாட்டில் பல்வேறு மருத்துவ முறைகள் கையாளப்பட்டு வருகிறது. அதில் ஒருவகை மருத்துவம்தான் ஹோமியோபதி என்பதாகும். புகழ் வாய்ந்த ஜெர்மன் நாட்டின் மருத்துவரும் வேதியியல் நிபுணருமான டாக்டர் சாமுவேல் ஹானிமென் (1755-1843) என்பவர் தான.
இம்மருத்துவத்தின் தந்தையாவார். இவர் முதலில் மருத்துவத்தில் பட்டம் பெற்று பெருவெற்றியும் புகழும் பெற்று பல ஆண்டுகளாக மருத்துவ தொழில் செய்து வந்தார். இருப்பினும் அவர் காலத்திய மருத்துவ ஆய்வு முறையானது, மக்கள் நோயுற்றபோது அவர்களுக்கு கெட்ட இரத்தம் தான் நோய்க்கு காரணம் என்று –அந்நோயாளி மீது அட்டையை விட்டு உறிஞ்ச செய்வது, இருதயத்திற்குச் செல்லும் சிரை என்று சொல்லப்படும் இரத்தக் குழாய்களை வெட்டி விட்டு இரத்தத்தை வடியவிடுவது –என்ற கொடிய சிகிச்சையால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அந்தக்கால வரலாற்றில் பேரறிவாளர்களான கோத்தெ, ராப்ஹேல், பைரன் பிரபு, ஜார்ஜ் வாஹிங்டன் ஆகியவர்களும் இந்த ஆட்கொல்லி மருத்துவ முறைக்கு பலியானார்கள்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்த டாக்டர் ஹானிமென்-மருத்துவ தொழில் மீது கடும் வெறுப்புற்று அதைவிட்டு விட்டார். ஆனாலும் அவரது மனம் எண்ணம் எல்லாம் தேடலில் இறங்கியது. மருத்துவம் செய்வதில் அறிவியல் முறையாக வெளிப்படுத்துவதற்குரிய அருஞ்செயல் ஒன்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். எதையும் தொடர்ந்து நுணுக்கமாக ஆராய்ச்சி செய்வதையும், அந்த ஆராய்ச்சியை அதை சோதனை செய்வதையும் முழுமையாக தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். அப்போது மருத்துவ நூல் ஒன்றை மொழி பெயர்ப்பு செய்தபோது சிங்கோணி எனும் மரப்பட்டை மிகவும் கசப்புத் தன்மை வாய்ந்தது என்றும், அப்பட்டை மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது என்பதை அறிந்தார். சிங்கோனா பட்டை மலேரியா காய்ச்சலை ஏன் எப்படி குணப்படுத்துகிறது என்பதை சோதனை செய்து கண்டறிய ஆர்வம் கொண்ட அவர் அதை கொஞ்சம் உள்ளுக்கு சாப்பிட்டுப் பார்த்தார். அவர் ஆச்சரியமும் வியக்கும் அளவிற்கு படிப்படியாக அவருக்கு அதிகமான அளவில் மலேரியா காய்ச்சலுக்குரிய நிலை, குளிர், காய்ச்சல் ஏற்பட்டதை அவர் உணர்ந்தார். அதைத் தொடர்ந்து மற்ற மருந்து சரக்குகளையும் உட்கொண்டும், பயன்படுத்தியும் சோதனைகள் செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக ஒவ்வொரு மருந்துச் சரக்கும் உண்டாக்கும் விளைவை , அதே போன்ற அதே மருந்து சரக்கு குணப்படுத்தும் என்பன ஆய்வின் மூலம் கண்டு பிடித்தார். இப்படியே பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து 15 ஆண்டுகளாக மேற்கொண்டார். இறுதியில் இந்த நியதியை உறுதிபடுத்தினார்.
அதாவது ஒரு எட்டிக்காயின் விசம் அதைச்சாப்பிட்டவருக்கு கெடுதல் ஏற்படுத்துகிறது என்றால், அதே எட்டிக்காய் விசத்தை மருந்தாக்கி அணு அளவிற்கு கொடுத்தால் எட்டிக்காயை சாப்பிட்டவரின் உடலையும், மனதையும் குணமாக்குகிறது.
SIMILIA SIMILIBUS CURENTER, இன்னும் திருக்குறள் வடிவில் சொல்லப்போனால் “எப்பொருள் எவ்வினை செய்யுமோ அப்பொருளின் அணுவினால் அவ்வினையகற்று”-எனலாம். அதனையொத்த நோயொன்றை விளைவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள அந்த மருந்துச் சரக்கு மூலமாக அதே நோயை குணப்படுத்தும் என்பதே இதன் பொருளாகும்.
ஹோமியோபதி மருத்துவ சோதனை முறை
ஹோமியோபதி மருத்துவ சோதனை முறை என்பது முதலில் மருந்தை மனிதனுக்கு கொடுத்து சோதிக்கப்படுகிறது.  அச்சோதனை மெய்பித்த பின்புதான் மற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் டாக்டர் ஹானிமென் முதன் முதலில் தனக்கு தானே மருந்து சாப்பிட்டு சோதித்து உணர்ந்து கொண்டார். அடுத்து சோதனையில் தேர்வு செய்த மருந்தை தன் குடும்பத்தாருக்கும் அதன்பின் நண்பர்களுக்கும் கொடுத்து உறுதி செய்து கொண்டார். அதன் பின்பு தான் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தார். இந்த சோதனை அறிவியல் முறையானதாகும்.
ஹோமியோபதி மருந்து கண்டறியப்பட்ட விதம்
நாம் ஏதேனும் ஒரு மருந்து அதிகமாக உட்கொண்டால் அதுவே நோயாகிவிடுகிறது என்பதையும்-அதே மருந்து சரக்கை அணுவாக்கி மிகச்சிறிய அளவில் கொடுத்தால் அந்நோய் குணமாகிறது என்பதையும் பரிசோதனைகள் மூலம் டாக்டர் ஹானிமென் கண்டறிதார். மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி தனிச் சிறப்பை பெற்றுள்ளது. இம்மருந்துகளால் பக்கவிளைவோ எதிர்விளைவோ ஏதும் இல்லை. மாறாக உடலில் உள்ள நோயின் விசத்தன்மையை முழுமையாக குணப்படுத்திவிடும்.
மருந்தை வீரியப்படுத்தல்
ஒரு திரவப்பொருளான மருது சரக்கு 99-பங்கும் மதுசாரம் 1-பங்கும் ஆக சேர்த்து 10-முறை குழுக்கினால் அது 1-வது வீரியம். இந்த 1-வது வீரிய மருந்திலிருந்து 1-பங்கும் மதுசாரம் 99-பங்கும் சேர்த்து 10 முறை குழுக்கினால் அது 2-வது வீரியம். இப்படியே 100, 000-வது வீரியம் வரையிலும் மருந்து தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு வீரிய மூட்டப்பட்ட மருதுகள் தான் மிகுந்த ஆற்றலுடன், அதுவும் சிறிய அணுவிலுள்ளதாக, பேராற்றல் வாய்ந்த மருந்தாக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
ஹோமியோபதி மருந்துகளை மாற்றியோ(அ)அதிகமாக உட்கொண்டு விட்டாலோ பின்விளைவுகள் ஏதும் இருக்காது. இம்மருத்துவ முறையில் பக்கவிளைவுகள், எதிர்விளைவுகள், விசத்தன்மை, ஒவ்வாமை போன்ற தீயக்குணங்கள் எதுவும் கிடையாது. இம்மருந்துகள் “தாய்த்திரவம்” என்றும், ” வீரியப்படுத்தப்பட்ட மருந்து “என்றும் இருவகைகளாக தயாரிக்கப்படுகிறது.  இம்மருந்துகளை மருத்துவரீதியாக தயாரிக்கப்பட்ட பால் சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட கடுகளவு உருண்டைகளில் கலந்து கொடுக்கப்படுகிறது. இம்மருந்து உருண்டை மிகவும் இனிப்பு சுவையாக இருப்பதினால் பிறந்த குழந்தைக்கு கூட நாக்கின் வழியாக கொடுக்கலாம். மேலும் ஹோமியோபதி மருந்துகளுக்கு காலாவதி என்பதும் கிடையாது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) –ஹோமியோ மருத்துவத்தை அங்கீகரித்துள்ளது.
ஹோமியோபதி மருந்தின் செயல்பாடுகள்
ஹோமியோபதி மருந்துகளின் செயல்பாடுகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதாவது ஆயிரக்கணக்கான மருந்துகள் இருந்த போதிலும்-இவைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து வேலைசெய்யாது. சில மருந்துகள் மற்ற மருந்துகளுடன் இணைந்து செயல்படுகிறது. சில மருந்துகள் மருந்தாகவும், சில மருந்துகள் பகை மருந்தாகவும் செயல்படுகிறது. எனவே ஒரு மருந்தை கொடுக்கும் போது அதோடு வேறு ஒரு ஹோமியோ மருந்து இணை மருந்தாக கொடுக்க வேண்டி வந்தால் அந்த மருந்து பகை மருந்தா, நட்பு மருந்தா, அல்லது முறிவு மருந்தா என பார்த்து கொடுக்கப்படுகிறது. மருந்து செயல்பாடுகள் குறித்து ஹோமியோ மெட்டீரியா மெடிக்கா புத்தகத்தில் முழு விளக்கங்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவம் செய்யமுடியுமா?
ஆம் முடியும். எந்த ஒரு கடுமையான நோய்கள் திடீரென்று ஏற்படினும் மனக்குறி, நோய்க்குறி அடிப்படையில் மருந்து தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சையளித்து குணமாக்கப்படுகிறது.
ஹோமியோபதி மருந்தின் பயன்பாடுகள்
ஹோமியோபதி முறையிலான மருத்துவத்தில் மனம் சார்ந்த, உடல் சார்ந்த, உறுப்புகள் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது.  மேலும், சின்னம்மை, காலரா, ஆஸ்த்மா, டிப்தீரியா, அமிபியா, இன்புளுன்ஷா, காக்குவான், இருமல், மணல்வாரி,  இளம்பிள்ளைவாதம், டெட்டனஸ் ஆகிய கொடிய நோய்கள் வராமலிருக்க தடுப்பு மருந்தாகவும் ஹோமியோபதி மருந்து சிறப்பாக பயன்படுகிறது. கொடிய நோயான எய்ட்ஸ்-மற்றும் பால்வினை நோய்களுக்கும் ஹோமியோ மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.  இன்னும் குறிப்பாக சொல்லப்போனால்-அனைத்து நோய்களுக்கும் அடிப்படையான காரணம் மனிதரின் மனநிலையே எனபதால், நோயாளிகளின் மனக்குறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மருத்துவ முறைக்கு எக்ஸ்ரே, ஸ்கேன்-இரத்தப்பரிசோதனை –எதுவும் அவ்வளவாக தேவைப்படுவதில்லை.  இம்மருத்துவம் மிகவும் எளிமையானது. நிரந்தர குணமளிக்க கூடியது. நோயின் விசத்தன்மையை முற்றிலும் நீக்கக்கூடியது. இம்மருத்துவம் மக்களுக்கான மருத்துவம் ஆகும்.
1839-ம் ஆண்டு முதற்கொண்டே ஹோமியோபதி இந்தியாவில் பரவத்தொடங்கியது. கல்கத்தா , இந்தியாவின் ஹோமியோபதி மையமாக மாறிவிட்டது. உலகத்திலுள்ள ஹோமியோபதி மருத்துவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களை இன்றைய இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் 94-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஹோமியோபதி மைய மன்றம் (“CENTRAL COUNCIL OF HOMOEOPATHI”) 1974-ல் அரசால் நியமனம் செய்யப்பட்டது. இந்திய மருத்துவ முறைகளின் மைய ஆராய்ச்சி மன்றம் (“CENTRAL COUNCIL OF RESEARCH IN INDIAN SYSTEM OF MEDICINE AND HOMOEOPATHI”) நவம்பர் 1969-ல் நிறுவப்பட்டது.